மீண்டும் ஜீனோ
சுஜாதா
'என் இனிய இயந்திரா' புத்தகத்தின் இரண்டாம் பாகம் தான் 'மீண்டும் ஜீனோ'.
‘என் இனிய இயந்திரா!’ ஆனந்தவிகடனில் தொடர்கதையாக வெளிவந்தபோது, முதல் அத்தியாயத்தின் இறுதியிலேயே ‘ஜீனோ’ என்கிற இயந்திர நாய் பேச ஆரம்பித்தது. முப்பத்து நான்காம் அத்தியாயத்தில் அதை ரவி - கால், வால், பாட்டரி என்று அக்கக்காகப் பிரித்துப் போட்டான். ரவிதான் நிலாவின் வீட்டுக்கு ஒண்டுக் குடித்தனம் வரும்போது இந்த நாயையும் அழைத்துவந்தான். இதெல்லாம் நடந்தது (அல்லது நடக்கப் போவது) கி.பி. 2021-ல், ஜீவா என்கிற ஒரு மஹா சர்வாதிகாரியின் கட்டுப்படுத்தப்பட்ட நிழலில் மக்கள் ஒரு ஸிந்தெடிக் சொர்க்கத்தில் அனுமதிக்கப்பட்டு சந்தோஷங்களைப் பகிர்ந்துகொண்டு, உன்னதமான உணர்ச்சிகளுக்கெல்லாம் தடைவிதித்து, வயதானவர்களைக் கொன்று, அருமையான நூல்களை ரத்து செய்து, பாட்டையும் கூத்தையும், பண்பாட்டையும் நீக்கி ஆட்சி செய்யும் சூழ்நிலையில், ‘மக்களாட்சி திரும்பி வரும் கழகம்’ என்கிற ரகசிய அமைப்பினைச் சேர்ந்த ரவி, மனோ இருவரின் புரட்சித் திட்டங்களில் நிலா அகப்பட்டுக் கொள்கிறாள். அவள், கணவன் சிபியைக் காணாது அவனை தேடிச் சென்றபோது ரவி, மனோவின் பரிச்சயம் ஏற்படுகிறது. ஜீவாவின் ஆதிக்கத்தை முறியடிக்கும் வீர நோக்கங்கொண்ட அவர்களின் இயக்கத்துக்கு உதவி செய்கிறாள்...
முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
----------
மீண்டும் ஜீனோ - சுஜாதா
‘என் இனிய இயந்திரா!’ ஆனந்தவிகடனில் தொடர்கதையாக வெளிவந்தபோது, முதல் அத்தியாயத்தின் இறுதியிலேயே ‘ஜீனோ’ என்கிற இயந்திர நாய் பேச ஆரம்பித்தது. முப்பத்து நான்காம் அத்தியாயத்தில் அதை ரவி - கால், வால், பாட்டரி என்று அக்கக்காகப் பிரித்துப் போட்டான். ரவிதான் நிலாவின் வீட்டுக்கு ஒண்டுக் குடித்தனம் வரும்போது இந்த நாயையும் அழைத்துவந்தான். இதெல்லாம் நடந்தது (அல்லது நடக்கப் போவது) கி.பி. 2021-ல், ஜீவா என்கிற ஒரு மஹா சர்வாதிகாரியின் கட்டுப்படுத்தப்பட்ட நிழலில் மக்கள் ஒரு ஸிந்தெடிக் சொர்க்கத்தில் அனுமதிக்கப்பட்டு சந்தோஷங்களைப் பகிர்ந்துகொண்டு, உன்னதமான உணர்ச்சிகளுக்கெல்லாம் தடைவிதித்து, வயதானவர்களைக் கொன்று, அருமையான நூல்களை ரத்து செய்து, பாட்டையும் கூத்தையும், பண்பாட்டையும் நீக்கி ஆட்சி செய்யும் சூழ்நிலையில், ‘மக்களாட்சி திரும்பி வரும் கழகம்’ என்கிற ரகசிய அமைப்பினைச் சேர்ந்த ரவி, மனோ இருவரின் புரட்சித் திட்டங்களில் நிலா அகப்பட்டுக் கொள்கிறாள். அவள், கணவன் சிபியைக் காணாது அவனை தேடிச் சென்றபோது ரவி, மனோவின் பரிச்சயம் ஏற்படுகிறது. ஜீவாவின் ஆதிக்கத்தை முறியடிக்கும் வீர நோக்கங்கொண்ட அவர்களின் இயக்கத்துக்கு உதவி செய்கிறாள்...
முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
----------
மீண்டும் ஜீனோ - சுஜாதா
Κατηγορίες:
Έτος:
2019
Έκδοση:
First
Εκδότης:
கிழக்கு
Γλώσσα:
tamil
Σελίδες:
207
Αρχείο:
PDF, 1.37 MB
IPFS:
,
tamil, 2019